Wednesday, October 7, 2015

நரகம் 2 கி மீ - பன்னிரெண்டாம்/இறுதி அத்தியாயம்

எழுதியவர் : மு பாலகுருநாதன்

சிக்கலான கேஸ் என்பது தெரியும். ஆனால் இத்தனை அபாயகரமான முடிவை நெருங்கும் அளவில் இருக்கும் என்பதை பாலகணேசன் எதிர்பார்த்திருக்கவில்லை. அதே நேரத்தில் தனியென ஒரு கிரகம். இதெல்லாம் பாலகணேசனுக்கு மலைப்பைக் கொடுத்தது! இதே நேரத்தில் கிஷோகர் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப ஆக்ஸிஜன் சிலிண்டர்களை நையிரா க்ரூக்ஸ் ற்கு கொண்டு வந்திருந்தாள்! தனியாக இரண்டுமுறை வந்த ஸ்பேஸ் ஜெட்களை மயங்கி இருந்த குறுந்தாடியும் கவனிக்கவில்லை. ஏற்கனவே இறந்துபோன அவர் அஸிஸ்டெண்ட்டும் கவனிக்கவில்லை! ஆண்டோ விற்கு தனியாக மெஸேஜ் வர அதிர்ந்தேவிட்டான். வேற்றுகிரக வாசிகள் வரும் நேரத்தில் இப்படி ஒரு தடையா? இதுவரை குரூரம் கக்கிய அவன் கண்களில் பயம் கவ்வியிருந்தது.
...........
அந்தப் பெண்களை மானிட்டர் செய்வது தான் தன் முதற்பெரும் வேலை. அவர்களையும் காணவில்லை. அனேகமாக எல்லோரும் இந்த கட்டிடத்தில் தான் ஒளிந்திருக்க வேண்டும். தனி கிரகம் ஆட்கள் அதிகம் வேண்டாம் என்று நினைத்திருந்த ஆண்டோ தன் சீனியருக்கு 'ஆபத்து. பெண்கள் மானிட்டர் கேமராக்களில் இருந்து தப்பிவிட்டனர். அவர்கள் ப்ளாக் ஹோல் அடைவதற்குள் நாம் பிடித்தாக வேண்டும். ஆட்கள் தேவை" என தகவல் கொடுத்தான். அந்தத் தகவல் சீனியரை அடைய சேட்டிலைட் தகவல் பரிமாற்றம் வழியாக செல்லும் சில நொடிகளுக்குள் பாலகணேசன் கிஷோகர் நையிரா கட்டிடத்தை அடைந்திருந்தனர். 
.........
"மாலினி.. அங்கே பார்!" மறைந்திருந்து பார்த்தவாறே பாலகணேசன் வருவதை காட்டினாள் அனுஷா. "இவர்கள் நம்மைத்தேடி தான் வருகிறார்கள். கண்ணில் பட்டோம். தொலைந்தோம். இவர்களை எப்படியாவது தாக்கி நாம் ப்ளாக் ஹோல் இருக்கும் இடத்தை மிரட்டிக் கேட்டுவிட வேண்டும்" என்றாள் அனுஷா.
சந்தியா உட்பட அனைவரும் ஆமோதித்தனர். அவர்கள் கட்டிடத்தை நெருங்க ஆரப்பித்ததும் சந்தியா கீழ் இருந்த ஒரு கூர்ந்த மரக்கிளையை எடுத்து கிஷோகரைப் பிடித்துக் கழுத்தில் வைத்து அழுத்தினாள். மாலினி மற்றவர்கள் நையிராவையும், பாலகணேசனையும் பிடித்துக்கொண்டனர். 
.........
நையிரா பெண்களிடம் எல்லாம் விலாவரியாக தெளிவுபடுத்தினாள். அவள் கிஷோகர் இருவரும் அந்த பெண்களை அழைத்துக்கொண்டு ஒரு நையிரா வந்த கலம் மூலமாக பூமி செல்ல பாலகணேசன் உத்தரவிட்டார். ஆண்டோவை தான் சமாளித்துக் கொள்வதாக சொன்னார். கிஷோகருக்கு ஒரே ஆச்சர்யம்! வேறு ஏதும் கேள்வி கேட்காமல் எல்லோரையும் காப்பாற்றிய திருப்தியில் பறந்தான்.
..........
வேற்று கிரக வாசிகளின் விண்கலம் இந்த பெண்களின் நிலை பற்றியும், ஜி1 ரத்த ஓட்டத்தின் நிலையினால் ஏதேனும் எதிர்வினை அவர்கள் உடலில் நேர்கிறதா என்பதை நேரடியாக ஆராயவும் இந்த க்ரூக்ஸ் கிரகத்திற்கு பார்வையிட வந்திருந்தனர். அவர்களுக்கு மற்றும் சில சிறிய விண்கலங்கள் இருந்தது அதிர்ச்சியைக் கொடுத்தது. அங்கிருந்தே ஆண்டோவிற்கு சேட்டிலைட் போன் செய்தார் ஆராய்ச்சியின் ஹெட் சபர்ஸ்! "எல்லாம் போச்சு ஹெட்.. பொண்ணுங்க தப்பிச்சுட்டாங்க! அவங்களுக்கு ப்ளாக் ஹோல் எங்க இருக்குனு தெரிஞ்சு போச்சு. பக்கத்துல இருக்குற விண்கலங்கள் போலீஸுனுடையது. தப்பி விடுங்கள்!" என்றான் ஆண்டோ!
"என்ன விளையாடுகிறாயா? மில்லியன் கோடி விஷயம் இதெல்லாம். கிட்டத்தட்ட 100 வருஷ உழைப்பு இந்த க்ரூக்ஸ் கிரகம்! நீ இல்லைனா இந்த வேலையைத் தொடர இன்னொரு ஆண்டோ வருவான். ஆனா இந்த நிமிஷம் உன் மூளை சிதறடிக்க என்னால முடியும். பார்க்குறியா?" என சபர்ஸ் முடிப்பதற்கு மூன்று மைக்ரோ செக்கண்டுகள் முன்பு பாலகணேசனின் துப்பாக்கியில் இருந்து வந்த குண்டு ஆண்டோவின் மூளையின் ஒரு டீஸ் ஸ்பூன் அளவில் உருவிக்கொண்டு மற்ற பக்கம் வழியாக வெளிவந்தது!
ஆபத்தை உணர்ந்த சபர்ஸ் மற்றும் குழு க்ரூக்ஸ் கிரகத்தை இன்விஸிபிள் மோடுக்கு மாற்றும் ஆயத்தங்கள் ஆக வேண்டும் என தன் மேலிடத்திற்கு தகவல் கொடுத்துவிட்டுப் பறந்தார்.
..........
ஆண்டோவைத் தூக்கிக் கொண்டு பாலகணேசன் தான் கிஷோகருடன் வந்த இன்னொரு கலத்துக்கு வந்தான். ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தியிருக்கும் பொழுது கூட பாலகணேசனுக்கு மூச்சு முட்டத் தொடங்கியிருந்தது. க்ரூக்ஸ் ஸின் சீதோஷண நிலை திடீரென மாறி குளிர் உறையத்தொடங்கி இருந்தது. அந்த செயற்கை மரங்கள் தங்கள் வேர்களை விட்டு சரியத் தொடங்கின. சபர்ஸ் ஸின் தகவல் மேலிடத்திற்கு சென்றிருக்க வேண்டும் என உறுதிப் படுத்திக்கொண்டு தாமதிப்பதில் அர்த்தம் இல்லை என கலத்தில் ஏறி ப்ளாக் ஹோல் வழியாக பறந்தார். அவர் சரியாக ப்ளாக் ஹோலை விட்டு வெளியே வர வர அந்த கிரகம் அப்படியே மறையத் தொடங்கியது. சுற்றி ஒரு லேயர் போன்று படர ஆரம்பித்தது. அத்தனை ஆச்சர்யம் காட்டிய புது உலகம் தன் கண் முன்னாலேயே அஸ்தமனம் ஆகிக் கொண்டிருந்ததை பாலகணேசன் சற்று வருத்ததுடனே பார்த்துக்கொண்டு இருந்தார்.
....................
அவர் அங்கு இருந்து கிளம்பும் பொழுது கம்ப்யூட்டரின் அத்தனை டேட்டாக்களை எடுத்துக்கொண்டதும், அந்த ஏலியன்ஸ் ஹெட் சபர்ஸ் சை ஏன் தப்ப விட்டார் என்பதையும் பாலகணேசன் மட்டுமே அறிந்திருந்தார்.
................
பூமி வந்ததும் கிஷோகரையும் அழைத்துக்கொண்டு சீனியரை கைது செய்தனர். "இன்னிக்கு தேதிக்கு கேம் எல்லாம் அவுட் ஆப் டேட். சாதரணமா கேண்டி கிரஸ், ப்ரின்ஸ் ஆப் பெர்சியா, கேங் ஆப் வார்னு கேம்ல இருக்குற சுவாரஸ்யம் எல்லாம் காணாம போயிடுச்சு. ரெண்டு லெவலுக்கு மேல யாருமே போறது இல்ல. அதுனால தான் மனிதர்கள் உயிரோட விளையாடுற விளையாட்டு அன்னிய நாடுகளில் இப்ப பேமஸ். இதுபோன்ற கேம்கள் இன்னும் இந்தியாவில் வெகு சீக்கிரம் பரவுறது நான் இல்ல. யாராலயும் தடுக்க முடியாது! இது மூலமா 5000 கோடி சம்பாதிச்சேன். அண்டோவ துணைக்கு வச்சுக்கிட்டேன். "...
சீனியரின் வாக்குமூலங்கள் பத்திரிக்கைகளை உலுக்கின. மக்கள் இப்படி ஒரு நிகழ்வு நடந்தேறியதை கிலியுடன் பேசிக்கொண்டனர். அந்தப் பெண்களை அவர்களின் கார்டியன்களிடம் ஒப்படைக்காமல் தனியார் காப்பகத்தில் சேர்த்தார் கிஷோகர். ஆண்டோ அடைத்து வைத்திருந்த வித்யாவையும் கிஷோகர் கண்டறிந்து விடுவித்து அந்த காப்பகத்தில் சேர்த்தார். அந்தப் பெண்களுக்கு எல்லாம் ஒரு கனவு போல இருந்தது. வெகு நாட்கள் கழித்து உடல் முழுக்க ஆடை அணிவது அவர்களுக்கு உறுத்தியதும் கூட. கிண்டலாக ஒருவரை ஒருவர் பேசி சிரித்துக்கொண்டனர்.
............
2வருடங்கள் கழித்து... 
.... 18 பெண்கள் மாயம் -செய்தி. கடத்தப்பட்ட 18 பெண்களுக்கும் ஒரே வயது 18 என்பது ஆச்சர்யமாக இருந்தது. தன் டேபிளுக்கு வந்த கேஸ் பைலைக் கையில் எடுத்தபடியே இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த இதே போன்ற ஒரு நிகழ்வை யோசித்துக் கொண்டிருந்தார் புதிதாக புலனாய்வு அதிகாரியாக பதவியேற்று இருக்கும் அதிகாரி பாலகுரு.
..........
"இந்த முறை எல்லாம் 18. 24 வயதுடைய பெண்களுக்கு ஹைக்யூ நிறைய இருப்பது நமக்கும் பிரச்சனைதான். அதுனால தான் பதினெட்டு. எல்லாரும் இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள இங்க க்ளாஸிடடிஸ் ப்ளானட் க்கு வந்துருவாங்க." என சபர்ஸ் க்கு தகவல் கொடுத்துக் கொண்டு இருந்தான் பாலகணேசன். அந்த க்ளாஸிடடிஸ் ப்ளானட் கருநீல நிறத்தில் பனி படர்ந்து ஒரு ஆர்ட்டிக் கண்டத்தை கண் முன் காட்டிக்கொண்டு இருந்தது. குளிருக்கு இதமாய் பாலகணேசன் மூன்றாவது பாக்கெட்டின் சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து அதிர சிரித்துக் கொண்டு இருந்தான்!

- முற்றும் -

உரலிகள்:-
முகநூலில் மு பாலகுருநாதன்
முகநூலில் இப்பதிவு

No comments :

Post a Comment