எழுதியவர் : ஹரீஷ் கணபதி
தோராயமாக மூன்றே முக்காலாவது சிகரெட்டை ஊதிக் கொண்டிருந்தான் கணேசன். மாலினியின் மூலத்தைக் கண்டுபிடிக்க முதலில் அவள் வளர்ந்த அநாதை ஆசிரமத்தை அடைய வேண்டும். அதில் ஏகப்பட்ட சிக்கல்கள். அந்த ஆசிரமம் ஏதோ இரும்புக் கோட்டை மாதிரி ஏகப்பட்ட விதிமுறைகளைப் போட்டு வைத்துக் கொண்டு இவனை அருகிலேயே நெருங்க விடவில்லை.
தெரிந்த அறிந்த ஆட்கள் மூலமாக இரும்புக் கோட்டையின் உட்புக முயற்சி செய்து கொண்டிருந்தான். அந்த முயற்சியின் ஒரு பகுதியாக செல்வாக்கான நண்பன் ஒருவனிடமிருந்து அழைப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்., அது வந்தால் தான் மேற்கொண்டு தொடர முடியும்.
நடுநடுவே அந்த டீக்கடையில் ஆஜானுபாகன் சொன்ன வார்த்தைகள் காதில் ஒலித்தபடியே இருந்தன.அதன் அர்த்தம் என்னவாய் இருக்கும்?
“பெரிய அறிவாளி மயிரு.. என்னையே ஏமாத்தறாளா,... சாவுடி”....
-----------------
ஆன்டோ சிகரெட் புகையை அந்த ஆஜானுபாகனின் மூஞ்சியிலேயே வட்டமாக ஊதினான். அவன் துளி கண்ணைக் கூட அசைக்காமல் நின்றான். முகம் இறுகியிருந்தது. முகமே அப்படித் தான்.
“பெரிய அறிவாளி மயிரு.. என்னையே ஏமாத்தறாளா,... சாவுடி”....
-----------------
ஆன்டோ சிகரெட் புகையை அந்த ஆஜானுபாகனின் மூஞ்சியிலேயே வட்டமாக ஊதினான். அவன் துளி கண்ணைக் கூட அசைக்காமல் நின்றான். முகம் இறுகியிருந்தது. முகமே அப்படித் தான்.
“என்ன அந்த வித்யாலக்ஷ்மி ரொம்ப முரண்டு பண்ணாளா?”
“சின்ன பீஸு. டக்குனு முடிஞ்சிருச்சு பாஸு. ஒண்ணும் பிரச்னையில்ல.” – ஆறடியன்.
“சின்ன பீஸு. டக்குனு முடிஞ்சிருச்சு பாஸு. ஒண்ணும் பிரச்னையில்ல.” – ஆறடியன்.
“சரி நீ போ. வேலிகிட்டயே இரு. தேவைப்பட்டா கூப்பிடறேன்” .
“மண்டையை ஆட்டி விட்டு அகன்றான் தடியன்.
“மண்டையை ஆட்டி விட்டு அகன்றான் தடியன்.
ஆத்திரம் கோபம் படபடப்பு இவையெல்லாவற்றையும் இந்த நூற்றுக் கணக்கான வருடங்களில் கடக்கப் பழகி விட்ட ஆன்டோவுக்கு சவாலாக இருந்தது, இருப்பது, இந்த ஒரே விஷயம் தான்.பெண் உடல். இதை எவ்வளவு முயற்சி செய்தும் கடக்க முடியாதது அவனுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. சில சமயங்களில் தன் லட்சியங்களுக்கு இடையூறாக இருந்தது எரிச்சலாகவும் இருந்தது.
அதனால் தேவையில்லாமல் இரு கொலைகள் வேறு அதிகமாகச் செய்ய வேண்டியதாகப் போய் விட்டது. ஒரு கொலை முடிந்து விட்டது. இன்னொன்று இனிமேல் தான். இதோ இப்போது வெளியே போகிறானே இந்த ஆஜானுபாகன் தான் அடுத்து.
அதென்னவோ அந்த வித்யாலக்ஷ்மி மேல் அப்படி ஒரு ஆசை. உடம்பில் சிப் செட் செய்து அவளை அனுப்ப வேண்டிய இடத்தில் தேவை இல்லாமல் பல கோடிகள் செலவு செய்து ஒரு எந்திரத்தை அனுப்ப வேண்டியதாகி விட்டது.
அவளை ஆசை தீர அனுபவிக்கலாம் என்று என்னுடனே வைத்துக் கொண்டால் அவள் என்னடாவென்றால் சீனியருக்கும் அந்த கிரக ஆட்களுக்கும் இடையே நான் ஆடும் என்னுடைய டபுள் கிராஸ் ஆட்டங்களையெல்லாம் கண்டுபிடிக்கப் பார்க்கிறாள்.
இந்த கிரகத்துக் காரர்களுக்கு வேறு நான் சீனியரோடு இருக்கும் போது கொடுக்கும் அப்டேட்டுகள் போதவில்லையாம். நான் வித்யாலக்ஷ்மிக்கு பதில் எந்திரத்தை அனுப்பப் போகும் விஷயம் தெரிந்து கொண்டார்கள்.
அவர்களுக்கு தெரியாமல் ஏதேனும் செய்து விட முடியுமா என்ன? அதைத் தெரிந்து கொண்டு அந்த ரோபோட்டுக்குள் தகவல் சேகரித்தனுப்பும் சிப்பை வைத்தே ஆக வேண்டும் என்று கட்டளையிட்டு நிறைவேற்றியும் கொண்டு விட்டார்கள்.
சீனியருக்கு ரோபோட்டை அனுப்பியது நான் தான் எனத் தெரியாமல் அதை அனுப்பியதுமல்லாமல் அதற்கும் சிப்பையும் வைத்தது எவ்வளவு பெரிய சாதுரியம். அது ரோபோ என்று தெரிந்த பின்னும் என் மீது அந்தாளுக்கு துளி சந்தேகம் கூட வரவில்லை.
இவள் என்னடாவென்றால் என்னை சைக்கோ என்கிறாள் கொலைகாரன் என்கிறாள். என்ன தான் இது போன்ற வார்த்தைகளெல்லாம் என்னைச் சுடாதெனினும் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு இடையூறாகவே இருந்தாள். வேறு வழியில்லாமல் அவளையும் அவள் மேல் இருந்த ஆசையையும் போட்டுத் தள்ள வேண்டியதாகப் போய் விட்டது.
கையில் இருந்த சிகரெட்டின் கங்கு சுடவே சட்டென்று சுய நினைவுக்கு வந்தவன் ஸ்ஸ்.. என்று அந்த சிகரெட்டை உதறி விட்டு அடுத்ததை பற்ற வைத்த அதே நொடியில் காம்பவுண்டின் வலப் பக்கத்தின் சென்சாரிலிருந்து அபாய ஒலி பீப் பீப் பீப் என விடாமல் எழும்ப அவன் மேஜையில் இருந்த லேப்டாப்பில் சிகப்பு நிறத்தில் அந்த எழுத்துக்கள் மின்னி மறைந்தன.
“ ரெட் அலர்ட்!!!!ரெட் அலர்ட்!!! ரெட் அலர்ட்!!!”
---------------
பின் பக்க வழியே அந்தக் கட்டிடத்துக்குள் நுழைந்த மாலதியைத் தொடர்ந்து பெண்களும் நுழைந்தனர். கைகளில் படர்ந்த பச்சையை மாலதி கவனித்தாலும் அதைப் பெரிதாய் சட்டை செய்யவில்லை. செடிகளிலிருந்து ஏதேனும் சாறு வழிந்திருக்கும் என்று எண்ணினாள்.
---------------
பின் பக்க வழியே அந்தக் கட்டிடத்துக்குள் நுழைந்த மாலதியைத் தொடர்ந்து பெண்களும் நுழைந்தனர். கைகளில் படர்ந்த பச்சையை மாலதி கவனித்தாலும் அதைப் பெரிதாய் சட்டை செய்யவில்லை. செடிகளிலிருந்து ஏதேனும் சாறு வழிந்திருக்கும் என்று எண்ணினாள்.
கால்கள் மெலிதாக நடுங்கத் துவங்கியிருந்ததை பயத்தின் விளைவு என எண்ணி ஒதுக்கினாள்.சட்டென்று அவளை முந்திச் செல்ல முயன்ற ஒரு பெண்ணை மூச்சுக் காட்டாமல் கைகளால் குறுக்கிட்டு நிறுத்தினாள்.
கேமரா என்பது போல் செய்கை செய்து மேலே காட்டி தலையைச் சுற்றி விரலை ஆட்டினாள். அவள் செய்கையைப் புரிந்து கொண்ட பெண்கள் எங்கேனும் கேமரா இருக்கிறதா என்று தங்களால் முயன்ற வரைக்கும் சுற்றிலும் பார்த்தனர்.
தங்கள் திருப்திக்கு உறுதி செய்து கொண்ட பின்பு நகரத் துவங்கியவர்களை மாலதி சுவரோரம் படிந்திருந்த ஆளுயர விளக்குகளின் நிழலிலேயே நடந்து வருமாறு பணித்தாள். அவள் முன்னே நடந்து கொண்டிருந்தாள். கைகளும் இப்போது மெலிதாக நடுங்கத் துவங்கியிருந்ததையும் கண்கள் லேசாகக் கலங்கலாகத் தெரிவதையும் சட்டென்று கவனித்தவள் நின்றாள். கண் மங்கலாகிக் கொண்டே வந்தது. சட்டென்று ஏதோ உணர்ந்தவளாக மூச்சை இழுத்து விட்டுக் கண்களை வலுக்கட்டாயமாகப் பெரிதாக்கியவள் கைகளிலிருந்த பழுப்பு நிற மலர்களை கசக்கித் தூர எறிந்தாள்.
எல்லாரையும் அதையே செய்யச் சொல்லி சொன்னாள். இன்னமும் அந்த சாற்றின் வீரியம் தாக்காத அவர்கள் குழம்பினாலும் மாலதியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அந்தப் பூக்களை வீசி எறிந்தனர். பூக்களை வீசி எறிந்ததும் தற்காலிகமாகக் கிடைத்த ஆடையைப் பறிகொடுத்தாற் போல் பரிதவிப்பு அவர்கள் எல்லாருக்கும். நெளிந்தனர்.
திடீரென அந்த வாடை அவர்களைத் தாக்கியது. இன்னதென்று உணர முடியாத ஆனால் கொடூரமான ஒரு வாடை., சட்டென்று மூக்கைப் பொத்திக் கொண்டனர். லேசாகக் குமட்டுவது போலிருந்தது. வாடைக்கு மூக்கு பழக ஓரிரு நிமிடங்கள் ஆனது. வாடை வந்த திசையை நோக்கி மாலதி நடக்கத் துவங்கினாள்.
பாதை குறுகிக் கொண்டே போனது. தலைக்கு மேலிருந்த உத்திரமும் உயரம் குறைந்து கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் மெல்லிய வெளிச்சம் மட்டுமே இருந்த ஒரு இடத்தில் வந்து முடிந்தது. வாடை அங்கிருந்து தான் வருகிறது என்பது உறுதியாகத் தெரிந்தது. அங்கே வரிசையாகத் துணி காய வைப்பது போல் கொடிகள் இருந்தன. அவற்றில் வரிசையாக்ச் சாரி சாரியாகத் தொங்க விடப்பட்டிருந்தது... அது என்ன?
மாலதி அருகில் போய்த் தொட்டுப் பார்த்தாள். அது... அது..... ஏதோ ஒரு மிருகத்தின் தோல். சத்தியமாக அவளுக்குத் தெரிந்த எந்த மிருகத்தின் தோலும் இல்லை அது. இந்த கிரகத்தின் ஏதேனும் ஒரு விலங்கினுடையதாக இருக்கலாம். கரு நீல நிறத்தில் என்ன மிருகம்? சட்டென்று அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. வரிசையாகத் தொங்கிய தோல்களில் ஒன்றை எடுத்துப் பார்த்தாள்.
அதற்குள் பின்னால் கிசுகிசுவெனப் பேசத் துவங்கியிருந்த இரண்டு பேரை ஷ்.. என்று மெல்லிய ஆனால் வலிமையான அதட்டல் சப்தம் கொண்டு அடக்கினாள். கையிலிருந்த தோலைப் பார்த்தாள். கிட்டத்தட்ட ஒரு சட்டை போன்ற வடிவிலிருந்தது. சட்டென்று முடிவெடுத்தவள் அதை சட்டை போல் மேலே போர்த்திக் கொண்டாள். வாடை ஒவ்வாததாக இருந்தாலும் மேலே போர்த்திக் கொள்ள ஏதோ கிடைத்ததே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. அந்த ஆடை அவள் முழங்கால் வரை தொங்கியது.
மற்ற பெண்களைப் பார்த்தாள். அவளை பின் பற்றி அவர்களும் ஆளுக்கொரு தோலை எடுத்துப் போர்த்திக் கொண்டனர். எல்லாருக்கும் ஒரு புது நம்பிக்கை வந்தது போலிருந்தது.
இதற்கு மேல் இங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்த மாலதி சுற்றும் முற்றும் பார்த்தாள். அப்போது நிமிர்ந்து பார்த்ததில் வெளிச்சம் மழுங்கடிக்கப்பட்ட சாளரம் ஒன்று தெரிந்தது.
இதற்கு மேல் இங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்த மாலதி சுற்றும் முற்றும் பார்த்தாள். அப்போது நிமிர்ந்து பார்த்ததில் வெளிச்சம் மழுங்கடிக்கப்பட்ட சாளரம் ஒன்று தெரிந்தது.
இரண்டு பெண்களைக் குனியச் சொல்லி சைகை காட்டினாள். அவர்கள் மதுகின் மேல் ஏறி அந்த சாளரத்தைத் துடைத்தாள். கட்டிடத்தின் முன் பக்கம் மேலே தெரிந்தது. இருளில் படபடப்பில் நடந்து வந்ததில் சரிவில் வந்திருக்கிறோம் என்று தெரியாமேலே வந்திருக்கிறார்கள், சாளரம் ஓர் ஆள் நுழையும் அளவு இருந்தது.
சற்றே பலம் கொடுத்து தள்ளவும் சிறு சப்தம் கூட இல்லாமல் திறந்து கொண்டது.. மாலதி எல்லாருக்கும் செய்கை செய்து விட்டு மெல்ல சாளரம் வழியே வெளியேறினாள்.
பின் ஒவ்வொரு பெண்ணாக
-------------------
ரோபோவை உள்ளே கொண்டு வந்து சேர்த்த அசதியில் அமர்ந்தபடி அசிரத்தையாய் சிசி டிவி கேமராவைப் பார்த்துக் கொண்டிருந்த குறுந்தாடி, திரையின் ஓரத்தில் வெகு மூலையில் தெரிந்த அந்த சலனத்தில் அதிர்ந்தான். உற்றுப் பார்த்தான். ஒவ்வொரு பெண்ணாக சாளரம் வழியே வெளியேறுவது தெரிந்தது.
பின் ஒவ்வொரு பெண்ணாக
-------------------
ரோபோவை உள்ளே கொண்டு வந்து சேர்த்த அசதியில் அமர்ந்தபடி அசிரத்தையாய் சிசி டிவி கேமராவைப் பார்த்துக் கொண்டிருந்த குறுந்தாடி, திரையின் ஓரத்தில் வெகு மூலையில் தெரிந்த அந்த சலனத்தில் அதிர்ந்தான். உற்றுப் பார்த்தான். ஒவ்வொரு பெண்ணாக சாளரம் வழியே வெளியேறுவது தெரிந்தது.
:மை காட்.... வந்துட்டாங்க. பில்டிங்குக்குள்ளேயே வந்துட்டாங்க.” என்று பதறியவன் அருகில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞனை உலுக்கி எழுப்பினான். “யூ பூல்... எழுந்திரு.. கெட் அப்.. என்ன நடக்குதுன்னு பாரு “,
அடித்துப் பிடித்து எழுந்த அவன் கண்கள் திரையில் நிலை கொண்டன. அவனும் அதிர்ந்தான். அடுத்த நொடி நாற்காலியைத் தள்ளி விட்டு எழுந்தவன் விரைந்து வெளியே ஓடினான்.
அதைப் பார்த்து அதிர்ந்த குறுந்தாடி “ ஏய்.. ஏய்.. வெயிட்.. வெளியே போகாதே.... மாஸ்க் மாஸ்க்... என்றவன் சட்டென்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு நாற்காலியோடு சாய்ந்தான்.
வெளியே வந்த இளைஞனின் கண்கள் பெண்களைத் தேடின.
வெளியே வந்த இளைஞனின் கண்கள் பெண்களைத் தேடின.
மூச்சு பெரிதாக வாங்கியது. அது ஓடி வந்ததால் அல்ல. அதை அவன் உணரும் போது மெல்லக் கண்கள் இருட்டத் துவங்கின. மூச்சுக் குழல் ஆக்சிஜனுக்குப் போராடத் துவங்கியது.
(தொடரும்)
உரலிகள்:-
No comments :
Post a Comment